25.3 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

முழங்காலின் கீழ் சுடவே உத்தரவிட்டோம்; அதிக பலம் பிரயோகிக்கப்பட்டதா என்பதை விசாரிக்கிறோம்: பொலிஸ்மா அதிபர்

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது முழங்காலுக்கு கீழ் துப்பாக்கிச் சூடு நடத்த பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நேற்று (19) அதிகாலை 1 மணியளவில் ரம்புக்கனை புகையிரத நிலையத்தை அண்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சிலர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் ஊடகங்களுக்கு விடுத்த விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காலை வேளையில் போராட்டக்காரர்கள் ரம்புக்கனை ரயில் பாதையை மறித்து ரயில் போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக அவர் கூறினார்.

அப்போது ரம்புக்கனை பொலிஸார் போராட்டக்காரர்களை சந்தித்து, அவர்களது  கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சித்ததாகவும், இரண்டு எரிபொருள் பவுசர்களை ஏற்பாடு செய்ததாகவும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் புகையிரத கடவையை கடந்து செல்ல முதல் பவுசரை அனுமதிக்கவில்லை எனவும், வீதியின் குறுக்கே பவுசரை நிறுத்தி, வாகனத்தின் பற்றரியை அகற்றி, டயர்களில் இருந்த காற்றை வெளியேற்றியதாகவும் அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் இரண்டாவது பவுசரையும் கைப்பற்றியதோடு, பழைய எரிபொருள் விலைக்கே எரிபொருள் வழங்குமாறு கோரியதோடு, கட்டுக்கடங்காத வகையில் தொடர்ந்தும் நடந்துகொண்டதாக பொலிஸ்மா அதிபர் மேலும் கூறினார்.

ரம்புக்கனை ஊடாக பயணிக்கும் அனைத்து புகையிரதங்களையும் இயக்க முடியாமல் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன தெரிவித்தார்.

காலையில் இருந்து போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறை பலமுறை அறிவுறுத்தியதாக அவர் கூறினார்.

கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் கலவரத்தைத் தொடங்கினர். முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தனர். இந்த குழுவினர் எரிபொருள் பவுசருக்கு தீ வைக்க முயற்சித்ததாகவும், பொலிஸ் உத்தரவை தொடர்ந்து அவமதித்ததாகவும், பொலிசார் ஆரம்பத்தில் போராட்டக்காரர்களை பொல்லுகளால் தாக்குவதற்கு வழிவகுத்ததாகவும் பொலிஸ் மா அதிபர் கூறினார்.

நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் போராட்டம் தொடரும் வேளையில், கண்ணீர் புகை குண்டுகளை வீசியதாகவும் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் பல போராட்டக்காரர்கள் கலைந்து சென்றதாகவும், மற்றொரு குழு சம்பவ இடத்தில் இருந்ததாகவும், அவர்கள் சிறு குழுக்களாக பிரிந்து, ரயில் பாதையில் இருந்து கற்களைப் பயன்படுத்தி காவல்துறையினரைத் தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பவுசரை சுற்றி வளைத்த பொலிஸாரைத் தாக்கியதாகவும், பொலிஸாரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாலும், பவுசரை எரியூட்டினால் பாரிய அழிவு ஏற்பட்டிருக்கும் எனவும், பொதுமக்களின் உயிர் மற்றும் உடமைகளை பாதுகாக்க குறைந்தபட்ச பலம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த வேண்டும். பொலிசார் முதலில் வானத்தை நோக்கிச் சுட்டனர், இன்னும் போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை, அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்களைக் கலைக்க முழங்காலுக்குக் கீழே துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஒரு ஏஎஸ்பி மற்றும் 10 போலீசார் காயமடைந்ததாகவும், பல போராட்டக்காரர்களும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறினார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ரம்புக்கனை பொலிஸ் பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், வன்முறையில் ஈடுபடுவதை தவிர்த்து சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு பங்களிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

பொலிஸ் தலைமையகத்தின் மேற்பார்வையின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, பொலிசார் கூடுதல் பலத்தை பயன்படுத்தினார்களா என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

வாயில் வந்தபடி ‘வெடிக்கிறார்களா’ ஜேவிபியினர்?

Pagetamil

வட்டாரக்கட்சிகளின் போலிக்கோசமும்… சீ.வீ.கே யின் அவசரமும்: புதிய கூட்டணியின் பின்னணி சங்கதிகள்!

Pagetamil

மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

Pagetamil

வெலிகம பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிணை

Pagetamil

Leave a Comment