ஹபரணை, ஹதரஸ்கொடுவ பிரதேசத்தில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் கந்தளாய் அக்போபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துச் சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.
முதியான்சலாகே குணதிலக்க பண்டார யகம்பத் (48) என்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
டிப்பர் வாகனமும், காரும் மோதியே இவ்விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கண்டியிலிருந்து கந்தளாய் பகுதிக்குச் சென்ற காரும் கந்தளாயில் இருந்து ஹபரனைக்குச் சென்ற டிப்பர் வாகனமுமே இவ்வாறு விபத்துத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விடுமுறையில் சென்று திரும்பி வரும் போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகி அக்போபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் தம்புள்ளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
