கட்டுநாயக்க – மாதுவவில் உள்ள ஆற்றிலிருந்து ஆண் சிசுவின் சடலமொன்றை கட்டுநாயக்க பொலிஸார் மீட்டுள்ளனர்.
சிறிய பொலித்தீன் பையொன்றில் இருந்தவாறே சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த ஆற்றின் அருகே உள்ள பாலத்தில் இருந்து சிசு வீசி எறியப்பட்டிருக்கலாமென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




