இலங்கையில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிக்கு கடத்தப்பட்டதாக முறைப்பாடு!

Date:

பிலியந்தலை, மடபான பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் தங்கியிருந்த பங்களாதேஷை சேர்ந்த பிக்குவொருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் (12) 7 பேர் கொண்ட குழுவினரால் வாகனம் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட அவர், அன்று மாலை ஹாலி எல பகுதியில் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹரகம பொலிஸ் நிலையத்தில் விசாரணையொன்றிற்காக சென்று திரும்பும் வழியில்,  26 வயதான பிக்குவின் முகம், கைகளை கட்டி வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஹாலி எல பகுதியில் இறக்கிவிடப்பட்டதாக கூறியுள்ளார்.

பிக்கு கடத்தப்பட்டமை குறித்த சரியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளுக்காக இந்த விடயம் சிஐடிக்கு அனுப்பி வைக்கப்படும்.

தாம் கடத்தப்பட்டு வீதியில் விட்டுச் சென்றதாக முறைப்பாடு செய்த பங்களாதேஷ் பிக்கு பதுளை பொது வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இன்றைய ராசி பலன் | 11.08.2026

## 🔮 இன்றைய ராசி பலன் | 11.08.2026 ♈ மேஷம்: புதிய...

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்

அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்