இலங்கையில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிக்கு கடத்தப்பட்டதாக முறைப்பாடு!

Date:

பிலியந்தலை, மடபான பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் தங்கியிருந்த பங்களாதேஷை சேர்ந்த பிக்குவொருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் (12) 7 பேர் கொண்ட குழுவினரால் வாகனம் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட அவர், அன்று மாலை ஹாலி எல பகுதியில் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹரகம பொலிஸ் நிலையத்தில் விசாரணையொன்றிற்காக சென்று திரும்பும் வழியில்,  26 வயதான பிக்குவின் முகம், கைகளை கட்டி வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஹாலி எல பகுதியில் இறக்கிவிடப்பட்டதாக கூறியுள்ளார்.

பிக்கு கடத்தப்பட்டமை குறித்த சரியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளுக்காக இந்த விடயம் சிஐடிக்கு அனுப்பி வைக்கப்படும்.

தாம் கடத்தப்பட்டு வீதியில் விட்டுச் சென்றதாக முறைப்பாடு செய்த பங்களாதேஷ் பிக்கு பதுளை பொது வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

நிதி நிறுவனத்தில் அதிர்ச்சிச்சம்பவம்: பெண்கள் கழிப்பறையில் இரகசிய கமரா!

ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை எடுத்த நபர்,...

லெபனானில் இஸ்ரேல் படைகள் தங்கியிருப்பதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா!

லெபனானுக்குள் இஸ்ரேலிய இராணுவம் நிரந்தரமாகத் தங்கியிருப்பதை டிரம்ப் நிர்வாகம் ஆதரிக்கவில்லை என்று...

இன்று சில பகுதிகளில் கடும் வெப்பம்

வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்