இலங்கையில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிக்கு கடத்தப்பட்டதாக முறைப்பாடு!

Date:

பிலியந்தலை, மடபான பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் தங்கியிருந்த பங்களாதேஷை சேர்ந்த பிக்குவொருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் (12) 7 பேர் கொண்ட குழுவினரால் வாகனம் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட அவர், அன்று மாலை ஹாலி எல பகுதியில் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மஹரகம பொலிஸ் நிலையத்தில் விசாரணையொன்றிற்காக சென்று திரும்பும் வழியில்,  26 வயதான பிக்குவின் முகம், கைகளை கட்டி வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் ஹாலி எல பகுதியில் இறக்கிவிடப்பட்டதாக கூறியுள்ளார்.

பிக்கு கடத்தப்பட்டமை குறித்த சரியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளுக்காக இந்த விடயம் சிஐடிக்கு அனுப்பி வைக்கப்படும்.

தாம் கடத்தப்பட்டு வீதியில் விட்டுச் சென்றதாக முறைப்பாடு செய்த பங்களாதேஷ் பிக்கு பதுளை பொது வைத்தியசாலையின் நீதித்துறை வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

மாநகர சபை செயற்பாட்டுக்கு ஆணையாளர் முட்டுகட்டை! ஆளும் மற்றும் எதிர்தரப்பு உறுப்பினர்கள் போராட்டம்

யாழ் மாநகரின் ஆணையாளர் மற்றும் அதிகாரிகளின் இடையூறுகளுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும்...

மாமாங்கேஸ்வரர் ஆலய “தேர்” திருவிழா விண்ணைப் பிளந்த பல்லாயிரக்கணக்கானபக்தர்களின் அரோகரா கோஷம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின்...

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானத்துக்கு வரவேண்டும்! – இம்ரான் எம்.பி

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் உறுதியான தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்