ஜீ.ஜீ.பொன்னம்பலம் சமஷ்டிக் கோரிக்கையை எதிர்த்தது, தனது தொழில் பாதிக்கப்படலாமென்பதாலும் இருக்கலாமென தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்.
அவர் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் அனைத்தும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை முன்வைத்துள்ள நிலையில், கட்சிகள் பிரிந்து நின்று செயற்படால், இணைந்து செயற்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.



