26.2 C
Jaffna
March 14, 2025
Pagetamil
இலங்கை

எரிபொருள் சிக்கலை தீர்க்காமல் பாடசாலைகளை திறப்பதால் நெருக்கடி!

நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வுகாணாமல் இம்மாதம் 7ஆம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வழிவகுக்கும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் இல்லாததால் பல பாடசாலை வாகனங்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எரிபொருள் நெருக்கடியினால் பொது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒரு அறிக்கையில், மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக பல கவலைகள் இருப்பதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரையில் சாதகமான தீர்வு கிடைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுராதபுரம் வைத்தியசாலைக்கு புதிய பதில் பணிப்பாளர்

Pagetamil

எம்.பி பதவியை துறந்தார் மு.காவின் நளீம்!

Pagetamil

விக்கி அணியும் கட்டுப்பணம் செலுத்தியது

Pagetamil

பெண்ணை எரித்துக்கொன்ற சம்பவத்தில் மேலுமொருவர் கைது

Pagetamil

யாழில் படம் காட்ட முயன்று வாங்கிக்கட்டிய ஜேவிபி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!