Pagetamil
இலங்கை

கோட்டா வரவின் எதிரொலி: வவுனியாவில் திருத்தப்படாமலிருந்த வீதிக்கு அவசர கதியில் ஒப்பனை!

ஜனாதிபதியின் வருகையை அடுத்து மன்னார் வீதியின் பல பகுதிகளிலும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்ட அவசர புனரமைப்பு நடவடிக்கையால் வீதியில் காணப்பட்ட பல குழிகள் காணாமல் போயுள்ளன.

வவுனியா, மன்னார் வீதியில் உள்ள பம்பைமடுப் பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்திற்கு நாளை (10) விஜயம் செய்யவுள்ளார்.

இதனையடுத்து வவுனியாவில் இருந்து மன்னார் வீதி ஊடாக பல்கலைக் கழகம் செல்லும் வரை உள்ள பகுதியில் வீதி புனரமைப்பின் போது நீண்ட நாட்களாக திருத்தப்படாது விடப்பட்டிருந்த பகுதிகள் மழைக்கு மத்தியிலும் அவசர அவசரமாக திருத்தப்பட்டு வீதிகளில் குழிகளின்றி மட்டப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில் மன்னார் – வவுனியா வீதி புனரமைப்பின் போது முழுமை பெறாது காணப்பட்ட 7 இடங்கள் அவசர அவசரமாக புனரமைக்கப்பட்டுள்ளதுடன், வீதியில் தற்போது அசௌகரியமின்றி மக்கள் பயணம் செய்யப் கூடியதாகவும் உள்ளது.

இதையும் படியுங்கள்

தனது தவறான முடிவால் கொல்லப்பட்டவர்களுக்காக 21 வருடங்களின் பின் முதல்முதலாக அஞ்சலித்த கருணா!

Pagetamil

சர்வகட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு!

Pagetamil

காவல்துறையில் புதிதாக 2,500 பேரை ஆட்சேர்க்க முடிவு

Pagetamil

நிராகரிக்கப்பட்ட மேலும் 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

இன்றைய வானிலை!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!