கிழக்கு

சம்பள அதிகரிப்பு கோரி திருகோணமலையில் சுவரொட்டிகள்!

அரச, அரை அரச, தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க கோரி திருகோணமலை நகர் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது.

இவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் அரச, அரைஅரச தனியார்துறை சம்பளத்தை ரூபா 15000ல் அதிகாரி, தனியார் துறையின் ஆகக்குறைந்த சம்பளத்தை ரூபா 26000ஆக ஆக்கு மற்றும் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ரூபா 1500ஆக ஆக்கு என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் திருகோணமலை நகரெங்கும் ஒட்டப்பட்டு உள்ளது.

இவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் தொழிலாளர் போராட்டம் மத்திய நிலையம் எனும் பெயரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரச தனியார்துறை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரி சுவரொட்டிகள் பிரசுரிக்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகாணத்தின் ஆசிரியர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரவ்பீக் பாயிஸ்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மேதின நிகழ்வு!

Pagetamil

மட்டக்களப்பில் பண்ணையாளர்கள் போராட்டம்

Pagetamil

பௌத்த பிக்குவிடமிருந்து விவசாய காணிகளை மீட்டுத்தரக் கோரும் தமிழர்கள்!

Pagetamil

இலங்கை தமிழ் அரசு கட்சி இரத்ததானம்!

Pagetamil

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர்

Pagetamil

Leave a Comment