அரச, அரை அரச, தனியார் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க கோரி திருகோணமலை நகர் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது.
இவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் அரச, அரைஅரச தனியார்துறை சம்பளத்தை ரூபா 15000ல் அதிகாரி, தனியார் துறையின் ஆகக்குறைந்த சம்பளத்தை ரூபா 26000ஆக ஆக்கு மற்றும் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை ரூபா 1500ஆக ஆக்கு என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் திருகோணமலை நகரெங்கும் ஒட்டப்பட்டு உள்ளது.
இவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாறு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் தொழிலாளர் போராட்டம் மத்திய நிலையம் எனும் பெயரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரச தனியார்துறை தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரி சுவரொட்டிகள் பிரசுரிக்கப்பட்ட போதிலும் கிழக்கு மாகாணத்தின் ஆசிரியர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
–ரவ்பீக் பாயிஸ்-