மூன்று புதிய அரசியல் கட்சிகள், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் கூட்டணி, நவ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. நவ லங்க◌ா சுதந்திரக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உள்ளார்.
மனோ கணேசன் தலைமையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 79 ஆகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1