24.8 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

தமிழ் இணையத்தில் வெளியான போலிச் செய்தி: வெளியானது உண்மை நிலவரம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து தனியான முஸ்லிம் கூட்டணியை உருவாக்கத் தீர்மானித்துள்ளனர் என்று தமிழ் இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் உண்மை நிலையை அறிய அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவானது அந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வினவியபோது அந்த செய்தியானது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியென்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு புதிய கூட்டணி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்பது முற்றிலும் கற்பனையான பொய்யான செய்தியாகும். அப்படியான எவ்வித முஸ்தீபுகளையும் நாங்கள் செய்யவில்லை என்றும் உறுதிபட எங்களுக்கு தெரிவித்தனர் என அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்கள், வெளிநாடொன்றின் தலையீட்டினால் இவ்வாறான பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களை அந்த செய்தியின் பால் திசைதிருப்பிவிட்டு தமது இலக்கினையும் காரியங்களையும் சிறப்பாக செய்ய முயற்சிக்கிறார்கள்.

இவர்களின் சதியில் மக்கள் விழமாட்டார்கள் எனும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறான பொய்யான செய்திகளை பரப்பி மக்களை திசை திருப்ப முடியும் என்று இந்த நவீன காலத்திலும் நம்புபவர்கள் அதி உயர்ந்த முட்டாள்களாகவே இருக்க முடியும் என்றனர் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ்வின் என்ற இணையத்தில் மேற்படி போலிச்செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிகிறது

Pagetamil

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

மாவைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நாமல்

Pagetamil

விரைவில் மீண்டும் சிக்கன்குனியா

east tamil

கிளிநொச்சியில் மேற்கொள்ளப்படுகின்ற நீர் துண்டிப்பால் பொது மக்கள் பாதிப்பு

Pagetamil

Leave a Comment