Pagetamil
இலங்கை

புகைப்படம் எடுக்க முயன்றபோது விபரீதம்: தந்தை, மகன் நீர்வீழ்ச்சியில் விழுந்து பலி!

தெனியாய பல்லேகம சத்மலை நீர்வீழ்ச்சியில் நீராட வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெனியாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி, ஜிந்தோட்டை, மஹா ஹபுகல பகுதியைச் சேர்ந்த மொஹமட் தாஹிர் மொஹமட் மன்சார் (வயது 48) மற்றும் அவரது மகன் மொஹமட் மன்சார் மொஹமட் மொஹீர் (வயது 16) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மகனை புகைப்படம் எடுக்க தயாராகி கொண்டிருந்த போது மகன் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற தந்தை நீர்வீழ்ச்சியில் குதித்ததாகவும், அதன் பின்னர் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்பதற்கு கடற்படையினரின் உதவியை பொலிஸார் நாடியுள்ளதுடன், தெனியாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்றத்திலிருந்து விலகி பெண்ணுக்கு வழிவிடப் போகிறேன்!

Pagetamil

அடுத்தடுத்து அம்பலமாகும் மோசடி விவகாரங்களில் தலைமறைவாகும் மஹிந்தவின் சகாக்கள்!

Pagetamil

கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் காரில் நசுங்கி பலி

Pagetamil

செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு எஸ்கேப்?

Pagetamil

பிரதேச செயலக உத்தியோகத்தரின் கதிரையை எடுத்து சென்றவருக்கு விளக்கமறியல்: அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!