40 மோட்டார் சைக்கிள்களை திருடிய 79 வயது ‘திருடர்’ கைது!

Date:

நாட்டின் பல பகுதிகளில் 40 மோட்டார் சைக்கிள்களை திருடிய 79 வயது ‘திருடரை’  எப்பாவல பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் சந்தேக நபர் மின்னேரிய புகையிரத நிலைய சந்தியில் வசிக்கும் 79 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். கைது செய்யப்படும்போது அவர் திருடிய 06 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருட்டுச் சம்பவங்களுக்கு பெயர் போன இந்த முதியவர் மீது, 17 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டிருந்தது. நாட்டின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக இந்த முதியவரும் இருந்தார்.

அவருக்கு ஏற்கனவே16 வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக இருந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

எப்பாவல பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு முறைப்பாடுகளையடுத்து பொலிசார் சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், திருடர் சிக்கினார்.

spot_imgspot_img

More like this
Related

ஏறாவூர் மாரியமன் ஆலயத்தி ஜயங்கேணி வாள்வெட்டு குழு தாக்குதலில் 4 பேர் படுகாயம் தாக்குதல் மேற்கொண்ட ஒரு வரை மடக்கி பிடிபு ஏனைவர் தப்பி ஓட்டம்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மைலம்பாவெளி விபுலானந்தபுரம்  மாரியம்மன் ஆலயத்தில்  அன்னதானம் வழங்கியவர்கள்...

காத்தான்குடியில் வீடு நிர்மாண பணியின் போது தூண் இடிந்து விழுந்ததில் கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

காத்தான்குடி பிரதேசத்தில் வீடு ஒன்று நிர்மாண பணியின்போது தூண் இடிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்