விஜே அஞ்சனா கேட்ட கேள்வியால் தான் அல்லு அர்ஜுன், புஷ்பா பட புரமோஷன் மேடையில் இருந்து கீழ் இறங்கி சென்றதாக வெளியான செய்தி குறித்து அஞ்சனா விளக்கமளித்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப்படத்தில் ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ளனர்.
புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல் மற்றும் அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் மிரட்டலான தோற்றத்தில் நடித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகர் ஃபஹத் பாசில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்துள்ளார். புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகி உள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப்படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற புஷ்பா பட புரமோஷன் விழாவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அஞ்சனா, அல்லு அர்ஜுனை புஷ்பா படத்திற்கு நடனமாட சொன்னார். ஆனால் அல்லு அர்ஜுன் அவரது கையை தட்டிவிட்டு கோபமாக மேடையை விட்டு இறங்கினார் என்றும் இணையதளத்தில் செய்திகள் பரவின.
இந்நிலையில் இந்த வதந்தி குறித்து தற்போது அஞ்சன ரங்கன் விளக்கமளித்துள்ளார்.
it was already way over time limit and the event was over. We just requested him to dance and he very politely denied with a smile keeping time protocols in mind. As simple as that. Now.. take this tweet and make it a news and gain some attention, like u want👍 #slowclaps 👏 https://t.co/qI8S2DEp14
— Anjana Rangan (@AnjanaVJ) December 23, 2021
அதில், அந்த நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்டிருந்த நேரம் ஏற்கனவே முடிந்துவிட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகு அவரை இரண்டு ஸ்டெப் மட்டும் ரசிகர்களுக்காக டான்ஸ் ஆட கேட்டோம். ஆனால் நேரமின்மையை மனதில் கொண்டு அவர் அதனை நாகரிகமாக மறுத்துவிட்டார். நடந்தது அவ்வளவுதான். இதை பெரிதாக்க வேண்டாம் என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும் அல்லு அர்ஜூன் தான் கேட்ட கேள்வியால் கோபமாக மேடையில் இருந்து இறங்கினார் என்பது தவறான தகவல் என்றும் அஞ்சனா தெரிவித்துள்ளார்.