31.9 C
Jaffna
April 20, 2024
இலங்கை

முருகன் ஆலயத்திற்கு முன் கருவாட்டு வாடி: அமைச்சர் டக்ளஸ் கண்டனம்!

இனமத ரீதியில் யாரையும் புண்படுத்தும் வகையில் எந்தவிதமான தீர்மானங்களும் அமையக் கூடாது என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பல்லின மக்கள் வாழுகின்ற இந்த நாட்டில் ஒவ்வொருவரும் ஏனையவர்களின் உணர்வுகளை பாதிக்காத வகையில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்து ஆலயத்திற்கு முன்பாக கருவாடு காய வைக்கும் வாடி அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திருகோணமலை கடலூர் முருகன் ஆலயத்திற்கு முன்பாக மீன் கருவாடுகளை காய வைக்கும் வாடி அமைப்பதற்கு சம்மந்தப்பட்ட பிரதேச அமைப்புக்களினால் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட குறித்த ஆலய நிர்வாகத்தினர், முருகன் ஆலயத்தின் சுற்றுவட்டாரத்தில் கருவாட்டு வாடி அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது, ஆலயச் சூழலின் புனித்தன்மையை பாதிப்பதாகவும், குறித்த வாடி அமைக்கப்பட்டுள்ள இடத்திலேயே ஆலயத்தின் தீர்த்தோற்சவம் நடத்தப்படுவது மரபாக இருகின்ற நிலையில்,

பிரதேசத்தில் வாழுகின்ற இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் அமைந்துள்ளது எனவும் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலயப் பிரதேசத்தில் கருவாட்டு வாடி அமைப்பதனால் இந்து மக்களுக்கு ஏற்படக்கூடிய உணர்வு ரீதியான பாதிப்புக்களை எடுத்துரைத்ததுடன், இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான நல்லுறவிற்கும் இந்தத் தீர்மானம் பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனால், குறித்த கருவாட்டு வாடியை பொருந்தமான இன்னொமொரு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

ஊடகப் பிரிவு – கடற்றொழில் அமைச்சர்

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இளம் ஆசிரியை கைது!

Pagetamil

அலுவலக நேரத்திற்கு முன்பாக படிப்படியாக மூடப்படும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம்; மக்கள் அசௌகரியம்: பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு

Pagetamil

சினிமா பாணி சம்பவம்: பொறி வைத்து கொல்லப்பட்ட கள்ளக்காதலன்; 34 வருடங்களின் பின் கொலையாளி கைது!

Pagetamil

உடலுறவு கொள்ளாமலே கர்ப்பமானாரா 13 வயது சிறுமி?

Pagetamil

கடலில் பொதுமக்களின் உதவியுடன் குழந்தை பிரசவித்தாரா யாழ்ப்பாண இளம் தாய்?: தீயாக பரவும் போலிச்செய்தி!

Pagetamil

Leave a Comment