Pagetamil
இலங்கை

மின்னல் தாக்கி இளைஞன் மரணம்!

வவுனியா, இராசேந்திரங்குளம் குளத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி மரணமடைந்துள்ளார்.

இன்று (26) காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதுடன், அவ்வப்போது இடி மின்னல் தாக்கமும் ஏற்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இராசேந்திரங்குளம் குளப்பகுதியில் இளைஞர் ஒருவர் மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது அப் பகுதியில் மின்னல் தாக்கியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இச் சம்பவத்தில் 30 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு மரணமடைந்தவராவார். குறித்த சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

செவ்வந்தி கடல் வழியாக இந்தியாவுக்கு எஸ்கேப்?

Pagetamil

பிரதேச செயலக உத்தியோகத்தரின் கதிரையை எடுத்து சென்றவருக்கு விளக்கமறியல்: அவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு!

Pagetamil

8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கணித ஆசிரியர் கைது!

Pagetamil

மோசமாக நடந்த இ.போ.ச நடத்துனர் பணி இடைநீக்கம்

Pagetamil

சாணக்கியன் சொன்னதை நிரூபித்து காட்டட்டும்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!