27.6 C
Jaffna
March 29, 2024
இலங்கை

UPDATE: நீதிமன்ற வாசலில் கேக் வழங்கிய சிவாஜிலிங்கம்! (VIDEO)

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கிளிநொச்சி நீதிமன்ற வாசலில் கேக் வழங்கினார்.

இன்று மாலை இந்த சுவாரஸ்ய சம்பவம் நடந்தது.

மாவீரர்நாள் அனுட்டிக்க கிளிநொச்சி நீதிமன்றத்தால் பலருக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த பட்டியலில் எம்.கே.சிவாஜிலிங்கமும் உள்ளடங்கியிருந்தார்.

இந்த தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரம் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கிற்காக நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், வழக்கின் பின்னர் நீதிமன்ற வாயிலில் நின்றவர்களிற்கு கேக் வழங்கினார்.

இன்றைய நாள் சிறப்பான நாள் எனவும், அதனை சந்தோசமாக கொண்டாடுமாறும் அவர் தெரிவித்து இவ்வாறு கேக்கினை அங்கு தரித்திருந்தவர்களிற்கு பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment