மின் பொறியியலாளர்கள் இன்று (25) தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக மின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.
இன்று நண்பகல் 12 மணி முதல் சட்டப்படி தொழில் செய்யும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதால், மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கெரவலப்பிட்டி அனல்மின் நிலையத்தின் 40 வீதமான பங்கை அமெரிக்காவிற்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1