29.3 C
Jaffna
April 13, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

மாவீரர்நாள் தடைக்கு எதிராக யாழ் நீதிமன்றத்தில் மனு!

மாவீரர்தினத்தை அனுட்டிக்க தடைவிதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை நீக்குமாறு கோரி, சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுத் தொடர்பாக பதிலளிக்க, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை 2 மணிக்கு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மாவீரர்நாள் அனுட்டிப்பிற்கு தடைவிதிக்க கோரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கம், கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருக்கு தடையுத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதில், தமிழ் தேசிய கட்சியின் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமாகி என்.சிறிகாந்தாவிற்கு எதிராகவும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று (24) சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறிகாந்தா மன்றில் முன்னிலையாகி, தன் மீது விதிக்கப்பட்ட தடைக்கட்டளையை நீக்க வேண்டுமென சமர்ப்பணம் செய்தார்.

அந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட போது, பிரதிவாதிகள் மன்றிற்கு அழைக்கப்பட்டு, கருத்துக்கள் கேட்கப்படவில்லையென்பதை சுட்டிக்காட்டிய அவர், பிரிவு 106இன் கீழ், அந்த கட்டளையை திருத்தவோ, மாற்றம் செய்யவோ முடியுமென்பதால், தடையுத்தரவை நீக்க வேண்டுமென சமர்ப்பணம் செய்தார்.

இதையடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மதியம் 2 மணிக்கு முன்னிலையாகி, பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

பிள்ளையான் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்: 90 நாட்கள் தடுப்புக்காவல்!

Pagetamil

இனி அமெரிக்காவின் இடத்தை நாம் தீர்மானிக்க வேண்டும்!

Pagetamil

யாழ், கிளி, மன்னாரில் சங்கு அணியின் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

பிள்ளையான் கைது!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!