25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
இலங்கை

நாளை முதல் தாதிய உத்தியோகத்தர்கள் போராட்டம்!

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தாதியர்களின் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் பல கவலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படாததால் நாளை முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க அகில இலங்கை தாதியர் சங்கம்  தீர்மானித்துள்ளது.

தமது தொழிற்சங்கப் போராட்டத்தின் பின்னரும் அதிகாரிகள் தமது கவலைகளை உதாசீனப்படுத்தினால், ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களின் பங்கேற்புடன் சுகாதார அமைச்சை முற்றுகையிடத் தயார் என்றும் அறிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூலம் போக்குவரத்து மற்றும் விபத்து கொடுப்பனவுகள் வழங்கப்படும் என ஜூலை மாதம் அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டதாக ஒன்றியத்தின் தலைவர் பிரபாத் பலிப்பன தெரிவித்தார்.

தாதிய உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு காண்பது குறித்து குழுவொன்று தீர்மானிக்கும் அதேவேளை சீருடை கொடுப்பனவு அதிகரிக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறான வாக்குறுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே தமது தொழிற்சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்த நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் பிரபாத் பலிப்பன குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரணிலை திருடன் என்ற நீதியமைச்சர் மன்னிப்பு கோர வேண்டும்: ஜீவன் தொண்டமான் வலியுறுத்தல்

Pagetamil

யாழில் சங்கிலி அறுத்தவர் கைது!

Pagetamil

யாழில் புள்ளிங்கோக்களை மாணவர்களாக மாற்றிய அதிபர்

Pagetamil

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்

Pagetamil

பாடசாலை மாணவர்கள், சீசன் டிக்கெட்காரர்களை ஏற்றாத இ.போ.ச பேருந்துகளா?: 1958 இற்கு அழையுங்கள்!

Pagetamil

Leave a Comment