29.3 C
Jaffna
April 13, 2025
Pagetamil
இலங்கை

சாணக்கியன் தமிழில் ஒன்றும், சிங்களத்தில் வேறொன்றும் பேசுகிறார்: ஆளுந்தரப்பு குற்றச்சாட்டு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜபுத்திரன் சாணக்கியன், நாடாளுமன்றத்தில் தமிழில் ஒன்றும், சிங்களத்தில் வேறொன்றும் பேசுவதாக ஆளுந்தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இன்று (15) நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்திலேயே இந்த சம்பவம் நடந்தது.

சாணக்கியன் உரையாற்றிய போது, தமிழிலும், சிங்களத்திலும் உரையாற்றினார். தமிழில் உரையாற்றிய போது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் உள்ளக அபிவிருத்திக்கு எந்த விசேட திட்டமும் வரவு செலவு திட்டத்தில் முன்வைக்கவில்லையென்றார்.

பின்னர் சிங்களத்தில் உரையாற்றிய போது, கிராமிய ரீதியான அபிவிருத்திக்க அரசாங்கம் நிதியொதுக்கும் திட்டத்தை விமர்சனம் செய்தார்.

இதன்போது, குறுக்கிட்ட ஆளுந்தரப்பு, சாணக்கியன் தமிழில் ஒன்றும், சிங்களத்தில் வேறொன்றும் உரையாற்றுவதாக சுட்டிக்காட்டினர்.

எனினும், சாணக்கியன் அதை மறுத்தார்.

வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்க விசேட திட்டங்கள் இல்லாமை, மற்றும் அரசாங்கத்தின் தவறான அபிவிருத்தி திட்டத்தையே விமர்சித்ததாகவும், அனைத்து இரண்டு மொழியிலும் ஒரே கருத்தையே முன்வைப்பதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவு வெளியாவதில் மாற்றம்!

Pagetamil

கூரை சூரிய மின்சக்தி அமைப்பு வைத்திருப்பவர்களிற்கு மின்சாரசபையின் அறிவிப்பு!

Pagetamil

ஜேவிபி வேறு… என்.பி.பி வேறாம்; ஜேவிபிக்கு கிடைத்த யாழ்ப்பாண காமராஜரின் உலகமகா உருட்டு!

Pagetamil

ஊழலற்ற உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க சங்கிற்கு வாக்களியுங்கள்: சந்திரகுமார் வேண்டுகோள்

Pagetamil

யாழில் சர்ச்சைக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்ற அமைச்சர்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!