26.5 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இலங்கை

மாயமான 3 சிறுமிகளும் வீடு திரும்பினர்!

கொழும்பு 12 இல் இருந்து திங்கட்கிழமை காணாமல் போன மூன்று சிறுமிகள் நேற்று (9) மாலை வீடு திரும்பியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

13- 15 வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகள் காணாமல் போனமை தொடர்பில் கெசல்வத்தை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கொழும்பு 12 ஐச் சேர்ந்த சிறுமிகளான பாத்திமா ரக்ஸா (15), அவரது சகோதரி பாத்திமா கதேரா (13) மற்றும் கம்பளையைச் சேர்ந்த உறவினர் பாத்திமா வர்யா (13) ஆகியோர் திங்கட்கிழமை காலை வீட்டை விட்டுச் சென்றதாகவும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

சிறுமிகள் தாயின் கையடக்கத் தொலைபேசியையும் எடுத்துச் சென்றதாக எஸ்.எஸ்.பி தல்துவா தெரிவித்தார்.

சிறுமிகளைக் கண்டுபிடிப்பதற்காக கொழும்பு (மத்திய) குற்றப்பிரிவு மற்றும் கெசல்வத்தை காவல்துறையின் இரண்டு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டதாக பேச்சாளர் கூறினார்.

குறித்த சிறுமிகள் அனுராதபுரத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.11,000 இலஞ்சம் வாங்கிய தபால ஊழியருக்கு 28 வருட சிறை!

Pagetamil

காய்கறிகளின் விலை அதிகரிப்பு

east tamil

9 வருடங்களில் 3477 யானைகள் இறப்பு

east tamil

வீடெரிந்த எம்.பிக்களுக்கு ரணில் அள்ளிக்கொடுத்த தொகை!

Pagetamil

தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலம்

Pagetamil

Leave a Comment