நவம்பர் 9: தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனம்!

Date:

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக சமூகம் இன்று நண்பகல் நாவவில் உள்ள திறந்த பல்கலைக்கழகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைக்கழக சமூக பிரதிநிதிகள் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவளிப்பார்கள்.

தொழிற்சங்க நடவடிக்கைக்கு பல தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களின் ஆதரவை கோரியுள்ளோம் என்றார்.

ஆசிரியர் அதிபர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்த ஜயசிங்க, திறந்த பல்கலைக்கழகத்திற்கு எதிரே இன்று நடைபெறவுள்ள போராட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் கலந்துகொள்ளவுள்ளனர் என்றார்.

விவசாயிகள், மீனவர்கள் உட்பட நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் இணைந்து நவம்பர் 9ஆம் திகதி ‘தேசிய எதிர்ப்பு தினமாக’ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜயசிங்க தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: தவெக பலம் 120 ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது...

15 வயது சிறுமி பாலியல் அடிமையாக்கப்பட்ட குற்றச்சாட்டு: பௌத்த பிக்குவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

அனுராதபுர நீதவான் நீதிமன்றம், கூறப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக,...

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்