கல்லடியில் வேலியிட முயன்றவர்களால் பதற்றம்!

Date:

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வடிச்சல் நிலப் பகுதியை, இன்று (02) காலை வேலியிட்டு அடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கல்லடியை ஊடறுத்து கல்லடி பாலத்தை இணைக்கும் வகையில் உள்ள குறித்த வடிச்சல் பகுதியையே சிலர் இன்று வேலியடைக்க முற்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பிரதேச கிராம சேவையாளர் உட்பட கிராம மக்கள் அப்பகுதிக்கு விரைந்து, அதைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது, அங்குவந்த பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.

சில காலங்களாக போலி உறுதிகளைக்கொண்டு குறித்த பகுதியை அபகரிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தாம் அதனைத் தடுத்து நிறுத்தி வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வடிச்சல் பகுதி ஊடாகவே மழைகாலங்களில் நொச்சமுனை தொடக்கம் கல்லடி வரையான பகுதிகளில் உள்வரும் வெள்ள நீர்கள் வடிந்து, கல்லடி வாவியில் கலப்பதாகவும் அப்பகுதியை அடைத்தால் அப்பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் எனவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே, குறித்த பகுதியை பாதுகாப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் உரிய அதிகாரிகளும் விரைவாக நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அந்தச் சம்பவம் காரணமாக, கல்லடி பாலம் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன், போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விஜய் அமைச்சரவையில் மோசடிப் பேர்வழி: எச்சரிக்கும் மைத்துனர்!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முதல்வர் விஜய் கண்காணிக்குமாறு லஜக தலைவர் ஜோஸ்...

திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் உதயநிதி ஸ்டாலின்

திமுகவின் சட்டப்பேரவைக் கட்சியின் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக தலைமை...

“தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

‘தமிழ்நாட்டில் நீண்டகாலமாக அரசு நிகழ்ச்சிகளில், துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவில் தேசிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்