25.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
இலங்கை

எந்த நேரத்திலும் உள்ளூராட்சி தேர்தலை நடத்த நாம் தயார்: தேர்தல்கள் ஆணைக்குழு!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எந்த நேரத்திலும் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் எதிர்வரும் காலங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படுமானால், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொற்றுநோய் நிலைமையைக் கருத்தில் கொண்டு திகதிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்றார்.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை ஓராண்டு வரை நீட்டிக்கும் அதிகாரம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு உண்டு. அதை தடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இல்லை.

2022  பெப்ரவரி 1 முதல் வாக்காளர்கள் பதிவு செய்யப்படுவார்கள் என்பதால், இடைக்காலத்தில் ஒரு துணை வாக்காளர் பதிவேடு தயாரிக்கப்படும். இதன் மூலம் வாக்காளர்கள் வாக்களிக்கும் உரிமையை இழக்கும் அபாயம் இல்லை என்றார்.

18 வயது நிரம்பிய நபர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர் அல்லது உதவி தேர்தல் அலுவலரிடம் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

துணை வாக்காளர் பதிவேடு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சான்றளிக்கப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மயக்க மருந்து கொடுத்து முச்சக்கரவண்டி திருட்டு

east tamil

யாழில் பல்பொருள் அங்காடிகளில் திருடும் பெண்கள் குழு: சிசிரிவி காட்சிகள்!

Pagetamil

யாழில் 85 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Pagetamil

நாமல் சட்டத்தரணியானது எப்படி?: விசாரணை நடத்தக்கோரி சிஐடியில் புகார்!

Pagetamil

கனேடிய நடுவண் அரசின் பழங்குடி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – குகதாசன் எம்.பி சந்திப்பு

east tamil

Leave a Comment