ரி20 உலகக்கிண்ண தொடரின்இன்றைய சூப்பர் லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியது.
சரித் அசலங்கவும், பானுக ராஜபக்சவும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தனர்.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீசியது.
முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை 171 ஓட்டங்களை பெற்றது.
தொடக்க வீரர் மொஹமட் நையிம் 62 ஓட்டங்களை பெற்றார். நடுவரிசையில் களமிறங்கிய முஷ்பிகூர் ரஹீம் 37 பந்துகளில் 57 ஓட்டங்களை குவித்தார்.
இலங்கை பந்து வீச்சாளர்களில் சமிக கருணாரத்த தவிர்ந்த மற்றைய அனைவரும் தாராளமாக ஓட்டங்களை கொடுத்தனர்.
சமிக கருணாரத்ன 3 ஓவர்களில் 12 ஓட்டங்களிற்கு 1 விக்கெட் வீழ்த்தினார். பினுர பெர்ணான்டோ மற்றும் லஹிரு குமார தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.
இலங்கை 2 ஓட்டங்களை பெற்ற போது முதலாவது விக்கெட்டாக குசல் பெரேரா வீழ்ந்தார். ஒரு கட்டத்தில் 79 ஓட்டங்களிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.
குசல் பெரேரா 1, பதும் நிசங்க 24, அவிஷ்க பெர்னாண்டோ 0, வனிந்து ஹசரங்க 6 என முன் வரிசை வீரர்கள் வீழ்ந்தனர்.
என்றாலும், ஒரு முனையில் அதிரடியாக ஆடிய சரித் அசலங்க ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களை பெறறுக் கொணடார்.
பின் வரிசையில் களமிறங்கிய பானுக ராஜபக்ஷ 31 வந்துகளில் 53 ஓட்டங்களை குவித்தார்.
பந்து வீச்சில் சகிப் ஹல் ஹசன் மற்றும் நசும் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
ஆட்டநாயகன் சரித் அசலங்க.