29.3 C
Jaffna
March 29, 2024
கிழக்கு

முச்சக்கர வண்டியை தீயிட்ட மர்ம நபர்கள்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று புதன் கிழமை (20) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் முச்சக்கரவண்டி ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கூட்டுறவு சங்க குறுக்கு வீதி, மீராவேடையில் உள்ள எம்.எல்.எம். நிப்ராஸ் என்பருக்கு சொந்தமான முச்சக்கர வண்டியே இவ்வாறு தீயில் கருகி நாசமாகியுள்ளது.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் உறங்கி கொண்டிருந்தபோது, வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடையும் சத்தம் கேட்டு கதவினை திறந்து பார்த்தபோது தமது முச்சக்கர வண்டி தீயில் எரிந்து கொண்டிருப்பததாக முச்சக்க வண்டி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அயலவர்களை அழைத்து தீயினை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டேன். நாளாந்தம் முச்சக்கரவண்டியின் மூலம் உழைக்கும் பணத்தினை கொண்டே லீசிங் கொம்பனிக்கு கடன் செலுத்தி வந்தேன் என்றும் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

முச்சக்கரவண்டியினை தீயட்டு கொழுத்தியவர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வீட்டுச் சுவரில் அனாமதேய கடிதத்தினை ஒட்டிவிட்டு சென்றுள்ளார்.

சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு தடயவியல் பொலிசார் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை அநீதிக்கு எதிராக 5வது நாளாக போராட்டம்!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

மருதமுனை மதரஸாவில் கொடூரம்!

Pagetamil

கல்முனையில் தமிழர்களுக்கு எதிரான அநீதி: மீண்டும் வெடித்தது போராட்டம்!

Pagetamil

ஆற்றில் குதித்த திருடன்: ட்ரோன் உதவியுடன் தேடுதல்!

Pagetamil

Leave a Comment