26.4 C
Jaffna
March 29, 2024
குற்றம்

தனியார் காணிக்குள் அத்துமீறி மணல் திருட்டு: தட்டிக்கேட்ட காணி உரிமையாளர் வைத்தியசாலையில்!

மறவன்புலவு பகுதியில் மணல் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட இருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (19) அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.

கோப்பாய் வடக்கை சேர்ந்த 34, 47 வயதுடைய இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மறவன்புலவிலுள்ள தனியார் காணியொன்றில் நீண்டகாலமாக மணல் திருட்டு நடந்து வருகிறது. காணி உரிமையாளருக்கு தெரியாமல், இரவில் அங்கு நுழையும் திருடர்கள், டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த திருடர்களை மடக்கிப் பிடிக்க நினைத்த காணி உரிமையாளரும், இன்னொருவரும் நேற்றிரவு தமது காணிக்கு சென்றுள்ளனர். இதன்போதே இவர்கள் தாக்கப்பட்டனர்.

“நேற்றிரவு எமது காணிக்கு சென்றோம். அங்கு மணல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். இது குறித்து பொலிசாருக்கு தகவல் வழங்கினோம். யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. மணல் ஏற்றி முடிந்த பின்னர்,எம்மை தாக்கினார்கள். மணல் திருட்டில் ஈடுபட்ட டிப்பர் மறவன்புலவை சேர்ந்தவருக்குரியது. அதை அடையாளம் காட்ட முடியும்“ என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment