அவசர பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் 13 மணி நேர நீர் வெட்டு அமலில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 09, 10, 11, 12 மற்றும் 13 ஆகிய பகுதிகளில் இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 9 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.
இதற்கிடையில், பிரதான நீர் பாதையில் அவசர பராமரிப்பு காரணமாக அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்தையில் 12 மணி நேரம் நீர் வெட்டு அமலில் இருக்கும்.
இன்று காலை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, வட்டுவ, வாஸ்கடுவ, பொதுப்பிட்டி, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, நாகொட, பிலிமினவத்த மற்றும் பொம்புவல பகுதிகளில் நீர்வெட்டு அமலில் இருக்கும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1