தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் கட்சித்தலைவர்களும் கலந்து கொண்ட இணையவழி கலந்துரையாடல் நேற்று முன்தினம் (26) நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர்கள் க.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
மின்சார தடை காரணமாக என்.சிறிகாந்தாவும், இன்னொரு கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்ததால் மாவை சேனாதிராஜாவினாலும் கலந்து கொண்டிருக்க முடியவில்லை.
காணி, அரசியல் கைதிகள், அடுத்த ஜெனிவா அமர்வுக்கான தயார்படுத்தல்கள் பற்றி இதில் கலந்துரையாடப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1