30.9 C
Jaffna
April 20, 2024
குற்றம்

பிணையில் வந்த 2 மாதத்தில் மீண்டும் மூதாட்டியை கொன்று கொள்ளையிட்டவர் கைது!

வெலிகடை – ராஜகிரிய வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் 71 வயதுடைய பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த படுகொலை சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

அந்த பெண் வீட்டில் தனியாக வசிப்பதையும், அவரது உடன்பிறப்புகள் வெளிநாட்டில் வசிப்பதையும் உறுதி செய்த பின்னர், சந்தேக நபர் 25 ஆம் திகதி அதிகாலை 4:30 மணியளவில் வீட்டின் கூரை ஓடுகளை அகற்றி வீட்டிற்குள் நுழைந்தார்.

காலடி சத்தம் மற்றும் வீட்டில் உள்ள அலமாரி சத்தம் கேட்டதம் “திருடன், திருடன்” என்று அந்த பெண் சத்தத்மிட்டுள்ளார். அவரது கழுத்தை நெரித்து கொன்று விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.

சத்தம் கேட்ட அயலவர்கள் அங்கு வந்து வெளியில் நின்று கூப்பிட்டனர். எனினும், பதில் இல்லாததால் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவரின் சகோதரி 25,000 ரூபாவை சம்பவத்தின் முந்தைய நாளில் குறித்த பெண்ணிடம் கொடுத்துள்ளமை வெலிகடை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலையை தொடர்ந்து அந்த பணம் காணாமல் போனது தெரியவந்தது.

அதனால் பணத்தை கொள்ளையிடும் முயற்சியில் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் ஊகித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெறப்பட்ட சி.சி.ரி.வி காட்சிகளினடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.

ராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 53 வயதான சந்தேக நபரை நேற்று பொலிஸார் கைதுசெய்தனர். அவர் சந்தேக நபர் கடுவெல, கொரத்தோட்டவை சேர்ந்தவர்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட் விசாரணையில், குறித்த வீட்டின் கூரையின் வழியாக வீட்டிற்குள் புகுந்து பெண்னை கொலை செய்ததன் பின்னர், பணத்தை திருடியமை தெரியவந்துள்ளது.

கைதான சந்தேக நபர் போதைக்கு அடிமையானவர். போதைப்பொருள் பாவனைக்கு பணம் தேவையென்பதால் கொலையை செய்ததாக தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் முன்னதாக அதுருகிரிய பொலிஸ் பிரிவில் இதே போன்று கொலையொன்றை செய்து நகை கொள்ளையிட்டுள்ளார். ஜோதிபால மாவத்தையில் 51 வயது பெண்ணைக் கொன்று தங்க நகையை பறித்துச் சென்றமைக்காக அதுருகிரிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர், 4 வருடங்கள் விளக்கமறியலில் இருந்த பின்னர், இரண்டு மாதங்களுக்கு முன்பு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபரை இன்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பழங்கால அம்மன் சிலையுடன் முன்னாள் போராளி கைது!

Pagetamil

யாழில் போதைப்பொருள் வாங்குவதற்காக திருடிய இளைஞன் பொலிஸ் புலனாய்வு பிரிவிடம் சிக்கினார்!

Pagetamil

43 வயது மனைவி கொலை: 25 வயது கணவன் சந்தேகத்தில் கைது!

Pagetamil

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 56 வயது ஆசாமிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

Pagetamil

மாமியை கொன்று கொள்ளையடித்த மருமகன் கைது!

Pagetamil

Leave a Comment