26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

போத்தலில் இருந்து வாயெடுக்காமல் யார் அதிகம் மது குடிப்பது?: விபரீத போட்டியால் யாழில் ஒருவர் பலி!

மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் அதிக மதுபானம் அருந்தும் போட்டி விபரீதமாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். எனினும், அவரது மரணத்தில் சந்தேகமிருப்பதாக உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு தென்மராட்சி  பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், மதுபானம் அருந்தும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். மதுபான போத்தலில் இருந்து வாய் எடுக்காமல் யார் அதிக மதுபானம் அருந்துவது என்ற போட்டியில் ஒருவர் உயிரிழந்தார். அவர் மதுபானம் புரையேறி இறந்ததாக, அவருடன் போட்டியில் ஈடுபட்டவர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.

எனினும், அவர் அதிக மது அருந்தச் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்றும் உறுதியாகியது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
1
+1
1
+1
2
+1
1
+1
6

இதையும் படியுங்கள்

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

Leave a Comment