27.6 C
Jaffna
March 29, 2024
இலங்கை

ஊரடங்கு நீங்குமா?… நீடிக்குமா?: இன்று முடிவு!

எதிர்வரும் செவ்வாய்க்கிழமையுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது குறித்த முடிவு இன்று அறிவிக்கப்படும்.

கோவிட் -19 தொடர்பான ஜனாதிபதி செயலணி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூடுகிறது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாடு மீண்டும் திறக்கப்பட்டால், அன்றாட நடவடிக்கைகளில் பின்பற்றப்பட வேண்டிய ஒழுங்குமுறைகள் குறித்த ஒரு வழிகாட்டுதலை  சுகாதார அதிகாரிகள் இன்று வெளியிடுவார்கள்.

செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு பிறகு தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும் போது விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கையை தொகுக்க கோவிட் -19 பணிக்குழுவின் முந்தைய கூட்டத்தில் ஜனாதிபதி உத்தரவுகளை பிறப்பித்தார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து சுகாதாரத் துறையின் பரிந்துரைகள் குறித்து இந்தக் குழு விவாதிக்கும்.

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை, பல்வேறு சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment