யாழில் கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணிப் பெண்ணொருவர் குழந்தை பிரசவித்த பின்னர் உயிரிழந்த துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் அளவெட்டியை சேர்ந்த சதீஸ்குமார் அபிமினி (42) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவர் கடந்த 8ஆம் திகதி உடல்நலக் குறைவுடன் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது.
அவர் 8ஆம் திகதியே குழந்தையை பிரசவித்தார்.
தாயாருக்கு தொடர்ந்து கொரோனா சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (14) உயிரிழந்துள்ளார்.
எனினும், குழந்தை நலமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1