வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உள்ளிட்ட 31 பேருக்கு தொற்று!

Date:

வவுனியா, தோணிக்கல் பகுதியில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கர்ப்பிணிப் பெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உட்பட 31 பேருக்கு இன்று (26) கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கோவிட் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் நேற்றும் (25.08) 177 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் கோவிட் பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதாரப் பிரிவினரால் பரவலாக எழுமாறான அன்டிஜன் பிரிசோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், தோணிக்கல் பகுதியில் எழுமாறாக 93 பேரிடம் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதில் கர்ப்பிணிப்பெண் உள்ளடங்களாக உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கும், தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 24 பேருக்குமாக 31 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

ரசிக வெறியால் வந்த வினை: தமிழக தேர்தலில் கள்ள வாக்கிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் கைது!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்று முடிந்துள்​ளது. எப்​போதும் இல்​லாத வகை​யில் இந்​த​முறை...

யாழில் மின்னல் தாக்கி இளைஞன் பலி

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் நேற்று (14) மின்னல் தாக்கி இளைஞர்...

உக்ரைனின் ட்ரோன்கள் அத்துமீறியதால் கவிழ்ந்த ஆட்சி: லாட்வியாவில் நடப்பது என்ன?

பால்டிக் நாடான லாட்வியாவிற்குள் அத்துமீறி நுழைந்த உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்