சல்மான் கானை தடுத்த வீரர் குறித்து சிஐஎஸ்எஃப் தகவல்!

Date:

பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த வாரம் மும்பை விமான நிலையத்தில் மத்திய தொழிலக காவல்படை அதிகாரியால் தடுத்து நிறுத்தப்பட்டார். நடிகர் சல்மான் கான், நடிகை கத்ரீனா கைஃப் ஆகியோர் இணைந்து நடித்துவரும் படம் ‘டைகர் 3’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அவர்கள் ரஷ்யா செல்லும் பொருட்டு விமான நிலையம் வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், மும்பை விமான நிலையம் சென்ற சல்மான் கான், முனையத்திற்குள் நுழைய முயற்சித்த போது, பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி அவரை தடுத்து நிறுத்திய மத்திய தொழிலக காவல்படை வீரர், பாதுகாப்பு சோதனைச் சாவடியிலிருந்து ஒப்புதல் வாங்கிவரும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. அதேசமயம், சல்மான் கானை தடுத்து நிறுத்திய வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், சல்மான் கானை தடுத்து நிறுத்திய வீரருக்கு அவரது கடமையை பாராட்டி வெகுமதி அளிக்கப்பட்டதாக சிஐஎஸ்எஃப் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சிஐஎஸ்எஃப் அலுவலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பதிவிடப்பட்ட ட்விட்டர் பதிவில் உண்மை இல்லை. தகுந்த ஆதாரங்கள் இல்லை. உண்மையாக, கடமையை நிறைவேற்றுவதில் முன்மாதிரியாக செயல்பட்ட அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று மத்திய தொழிலக காவல்படை பதிவிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்