சல்மான் கானை தடுத்த வீரர் குறித்து சிஐஎஸ்எஃப் தகவல்!

Date:

பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த வாரம் மும்பை விமான நிலையத்தில் மத்திய தொழிலக காவல்படை அதிகாரியால் தடுத்து நிறுத்தப்பட்டார். நடிகர் சல்மான் கான், நடிகை கத்ரீனா கைஃப் ஆகியோர் இணைந்து நடித்துவரும் படம் ‘டைகர் 3’. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக அவர்கள் ரஷ்யா செல்லும் பொருட்டு விமான நிலையம் வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், மும்பை விமான நிலையம் சென்ற சல்மான் கான், முனையத்திற்குள் நுழைய முயற்சித்த போது, பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி அவரை தடுத்து நிறுத்திய மத்திய தொழிலக காவல்படை வீரர், பாதுகாப்பு சோதனைச் சாவடியிலிருந்து ஒப்புதல் வாங்கிவரும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. அதேசமயம், சல்மான் கானை தடுத்து நிறுத்திய வீரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், சல்மான் கானை தடுத்து நிறுத்திய வீரருக்கு அவரது கடமையை பாராட்டி வெகுமதி அளிக்கப்பட்டதாக சிஐஎஸ்எஃப் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சிஐஎஸ்எஃப் அலுவலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பதிவிடப்பட்ட ட்விட்டர் பதிவில் உண்மை இல்லை. தகுந்த ஆதாரங்கள் இல்லை. உண்மையாக, கடமையை நிறைவேற்றுவதில் முன்மாதிரியாக செயல்பட்ட அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று மத்திய தொழிலக காவல்படை பதிவிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையர்களை குறிவைக்கும் அழகான பெண்கள்

சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி தளங்கள் வழியாக இலங்கையர்களைக் குறிவைத்து நடத்தப்படும்...

ஈரான் சிக்கலில் இருந்து விரைவில் வெளியேற ட்ரம்பிற்கு கூட்டுப்படை தலைவர் ஆலோசனை

கூட்டுப் படைத் தலைவர் ஜெனரல் டான் கெய்ன், ஈரானுடனான மோதலில் இருந்து...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள் மீட்பு

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற வெள்ளாடுகள் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்