தலதா ஆலயத்தின் எசல பெரஹெர விழாவின் இறுதி ‘ரந்தோலி பெரஹெரா’ வீதி உலா இன்றிரவு இடம்பெற்றது.
மாலை 6:44 மணிக்கு கண்டி வீதிகளில் ரந்தோலி பெரஹரா வீதி உலா இடம்பெற்றது.
நீர் வெட்டும் விழா மற்றும் நாள் ஊர்வலம் நாளை நடைபெறுகிறது, அதன்பின், எசல பெரஹராவை வெற்றிகரமாக முடித்ததை அறிவிக்கும் நிருபம் தியவடன நிலமே மற்றும் பஸ்நாயக்க நிலமேயினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும்.
நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் எசல பெரஹரா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது.
இன்றைய ஊர்வலத்தில் நடுங்கமுவ ராஜா மற்றும் சுமார் 100 யானைகள் பங்கேற்றன.



