தர்மபுரம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற சட்டவிரோத மணல்
அகழ்வுகளில் ஈடுப்பட்ட வாகனங்களும் சந்தேக நபர்கள் 5 பேரும் பொலீஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் அரச மற்றும் தனியார்
நிறுவனங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு மணல்
எடுத்துச் செல்லப்படுவதாக பொலீஸார் தெரிவித்தனர்.
தருமபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலைய 24 மணி நேர குற்றச்
செயல்களை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுகொண்டிருந்த
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய கல்லாறு பகுதியில்
அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிய 2 டிப்பர்களும் அதன் சாரதிகளும் மற்றும் புளியம்பொக்கணை பகுதியில் 01டிப்பரும் தருமபுரம் பகுதியில் 1 டிப்பரும் கல்மடு பகுதியில் ஒரு 1 உழவு இயந்திரம் அதன் சாரதியும் மற்றும் 01 டிப்பரும் பொலீஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர் பலகையினை தமது வாகனங்களில்
காட்சிப்படுத்தி குறித்த மண்கடத்தல் இடம்பெற்றுள்ளது.
தற்பொழுது சூட்சமமான முறையில் மணல் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு
செல்லப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவ்வகையில் தற்பொழுது
வீதி அபிவிருத்தியில் ஈடுப்பட்டுள்ள மாகா நிறுவனம் மற்றும் R.Rநிறுவனம்
மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் என பெயர் பலகைகள் பொறிக்கப்பட்டு
டிப்பர் வாகனத்தில் முன்னால் காட்சிப்படுத்தப்பட்டு சட்டவிரோதமான
முறையில் மணல் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தமக்கு
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்றைய சுற்றிவளைப்புகள்
இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தொடர்பாக
மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.