தீவுகளில் தேசியக்கொடிகளை ஏற்றத் திட்டம்: தடுத்த மக்கள்

Date:

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதிலும் உள்ள தீவுகளில் தேசியக்கொடிகளை ஏற்றி கொண்டாடுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. அதன்படி நேற்று முதல் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. கோவா மாநிலத்திற்கு உட்பட்ட சாவோ ஜசின்டோ தீவில் கடற்படை சார்பில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் இதற்கு உள்ளூர் மக்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து கொடியேற்றும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இந்த தகவலை அறிந்த முதல்வர் பிரமோத் சாவந்த், திட்டமிட்டபடி சாவோ ஜசின்டோ தீவில் தேசியக்கொடியை ஏற்றும்படி கடற்படை அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தீவில் எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார். தேச விரோத நடவடிக்கைகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும் என அவர் கூறி உள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

செயற்கை நுண்ணறிவு உதவியுடன் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு – பெருந்தொற்றுகளைத் தடுப்பதில் முக்கிய முன்னேற்றம்

எதிர்காலத்தில் உலகை அச்சுறுத்தக்கூடிய புதிய வைரஸ்கள் மற்றும் பெருந்தொற்றுகளில் இருந்து மனிதகுலத்தைப்...

குரு-சந்திர சேர்க்கையால் உருவான சமசப்தக் யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றியும் செல்வமும் குவியுமா?

ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் ஜோதிட ரீதியாக பல சுப யோகங்கள் உருவாகி...

முச்சக்கர வண்டியின் மீது மரம் விழுந்து 3 பேர் பலி

நாவலப்பிட்டியிலிருந்து மப்பகந்த பகுதிக்குச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது யூக்கலிப்டஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்