நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினருடன் பழனி கோவிலுக்கு வந்தார்.
மின்இழுவை ரெயில் மூலம் மேலே சென்ற சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்து அங்கிருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். கோவில்கள் அடைக்கப்படும் என்பதால், முன்னதாக பழனி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ததாக தெரிவித்தார். இதனைதொடர்ந்து அவர் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.