Pagetamil
சினிமா

மறக்க முடியாத அனுபவம் – படப்பிடிப்பு அனுபவத்தை பகிர்ந்த கார்த்திக் சுப்புராஜ்!

தமிழின் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் பலர் இணைந்து உருவாக்கியுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், நெட்பிளிக்ஸ் தளத்தில் நாளை உலகளவில் வெளியாகிறது. மனித உணர்வுகள் ஒன்பதை மையமாக வைத்து உருவாகியுள்ள நவரசாவில், அமைதி உணர்வை மையமாக வைத்து, ஒரு பகுதியை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இப்பகுதியில் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த குறும்படத்தில் இயக்குனர் கெளதம் மேனனுடன் இணைந்து பணியாற்றியது குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது, இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்களை என் கல்லூரி நாட்களில் இருந்தே எனக்கு தெரியும். ஒரு திரைப்பட இயக்குநராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நடிகராக, இப்போது தான் தன் பயணத்தை தொடங்கியுள்ளதாக என்னிடம் சொன்னார். அதனால் இப்படத்தில் எனக்கு என்ன வேண்டும் என்பதையும், அவர் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் அவரிடம் தெளிவாகச் சொன்னேன்.

நாங்கள் மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தினோம். கடைசி நாளில், படப்பிடிப்பு மிகவும் அழுத்தமாக இருந்தது, ஏனென்றால் படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க வேண்டியிருந்தது, அவர் ஒரு சிறந்த திரைப்பட இயக்குநர் என்பதால் இந்த அழுத்தங்களை புரிந்துகொண்டு மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்தார். படத்தின் முதல் பிரதியை மிகவும் ரசித்தார். அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது என குறிப்பிட்டார்.

பாசமலர் பாணியில் ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’: இணையத்தில் வைரலாகும் பர்ஸ்ட் லுக்! மேலும், படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா கதாப்பாத்திரங்கள் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது, கௌதம் மேனன் மற்றும் பாபி சிம்ஹா கதாப்பாத்திரங்கள் படத்தில் மிகச்சிறந்த நண்பர்கள். திரையில் அவர்களது நட்பு மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. திரைக்கதை விவாதத்தின் போது, இருவரும் மிகச்சிறந்த நண்பர்களாக மாறிவிட்டனர். படத்தில் இருவரும் சேர்ந்து வருவது போல் நிறைய காட்சிகள் உள்ளன. இருவருக்குமிடையே படப்பிடிப்பில் உணர்வுப்பூர்வமான உறவு ஏற்பட்டுவிட்டது. படத்திலும் அது மிகச்சிறப்பாக வந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.” நவரசா” மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும் ஆந்தாலஜி திரைப்படம். Justickets நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். “நவரசா” நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை, பிரத்தியேகமாக 190 நாடுகளில் வெளியாகிறது.

நெட்பிளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்ணனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள், இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், இணைய இணைப்பு இருந்தால், எவ்வளவு கதைகளை வேண்டுமானாலும் பார்க்க முடியும். சந்தாதாரர்கள் படத்தை நிறுத்தி, ஃபார்வேட் செய்து, எந்த விளம்பரங்கள் இல்லாமல் தங்கள் விருப்பப்படி பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

‘திருமணமான ஆணுடன் தொடர்பு வைக்க மாட்டேன்’: ஜி.வி.பிரகாஷுடனான உறவை மறுக்கும் நடிகை திவ்யபாரதி!

Pagetamil

கார் விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் சோனு சூட் மனைவி

Pagetamil

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!