சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் இன்று (5) உயிரிழந்தார்.
78 வயதான முதியவர் கடந்த ஒரு வாரமாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை உயிரிழந்தார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கொரோனா சிகிச்சை மையத்தில் பதிவான முதலாவது மரணம் இதுவாகும்.