நாட்டில் நேற்று (3) கொவிட் 19 தொற்றுடன் 2,450 பேர் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 316,219 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தொற்றாளர்களில் 2,423 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் நாட்டிற்கு வந்த 27 பேருக்கும் நேற்று கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் 28,804 பேர் சிகிச்சை பெற்று வருவதாகசுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு, தெரிவித்துள்ளது.
நேற்று, கோவிட் -19 இலிருந்து குணமடைந்த 1,902 நபர்கள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 282,770 ஆக உயர்ந்துள்ளது.
கோவிட் -19 தொற்று சந்தேகத்தில் 1,516 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.




