கொரோனா தொற்று எகிறுகிறது; நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்: அதிர்ச்சி காட்சிகள்!

Date:

நாட்டில் கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வைத்தியசாலைகள் நிறைந்து வருகிறது. இந்த நிலையில், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் உள்ள மோசமான நிலைமை குறித்த காணொளி  வெளியிடப்பட்டுள்ளது.

டெய்லி மிரர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளின் படி, நோயாளிகள் மருத்துவமனையின் நடைபாதையில் பாய்களில் தூங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

தினசரி அதிகரித்து வரும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை காரணமாக மருத்துவமனையின் திறன்னை மிஞ்சிய நோயாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

https://twitter.com/i/status/1422822060334608386

இந்த நிலையில், மக்கள் பொறுப்புடன் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பொதுமக்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலமே இவ்வாறான நெருக்கடியிலிருந்து மீள முடியுமென சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இலங்கையின் பல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ஐசியு) தற்போது கோவிட் நோயாளிகளால் நிரம்பிவிட்டன.

இதேவேளை, கொழும்பு வடக்கு வைத்தியசாலையின் நிலைமை குறித்த இரண்டு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்த புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்