‘என் சாவுக்கு காரணம்’: நீதிமன்றம் இன்று வழங்கிய உத்தரவு!

Date:

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணிபுரிந்த போது, தீயில் எரிந்து உயிரிழந்த சிறுமி இஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்ட வாக்கியத்தின் கையெழுத்து இஷாலினியுடையது தானா என்பதை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி, கையெழுத்து ஆய்வாளருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்திர ஜெயசூர்யா இன்று (04) உத்தரவிட்டார்.

உயிரிழந்த சிறுமியின் புத்தகங்கள் மற்றும் துணிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடக் கோரி கொழும்பு தெற்கு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் இன்று (04) மனு தாக்கல் செய்தது. இதன்போதே, நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்தது.

சிறுமியின் பாடசாலை புத்தகங்களில் உள்ள கையெழுத்தையும், சிறுமி தங்கியிருந்த அறையின் சுவரில் எழுதப்பட்டிருந்த “en Savuku Karanam” என எழுதப்பட்டிருந்த வசனத்துடன் ஒப்பிட்டு, இரண்டும் ஒருவரால் எழுதப்பட்டதாக என நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சிறுமியின் அறையில் கண்டெடுக்கப்பட்ட பல துணிகள் சிறுமியின் சொந்தமா என்பதை ஆராய்ந்து அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்க ஆய்வாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக பல தொலைபேசி நிறுவனங்களின் பதிவுகளைப் பெற வேண்டியிருப்பதால், பல தொலைபேசி நிறுவனங்களுக்கு உத்தரவுகளை பிறப்பிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர். நீதிமன்றம் அந்த உத்தரவகளை பிறப்பித்தது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் சண்டை தொடர்கிறது!

கடந்த மாத போர் நிறுத்தத்தை முற்றிலுமாகச் சிதைத்த, ஒரு வார காலமாக...

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்