அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் இன்று முதல் மடக்கப்படும்!

Date:

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சு, பொலிஸ்மா அதிபரை கேட்டுக் கொண்டுள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு எழுதிய கடிதத்தில், இன்று முதல் நாடளாவிய ரீதியில் சோதனைகளை நடத்துமாறு கோரியுள்ளது.

இருக்கை திறனுக்கு மேல் ஆட்களை ஏற்றிச் செல்லும் அனைத்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் சோதனை நடத்துமாறு அந்த கடிதத்தில் குறப்பிடப்பட்டுள்ளது.

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களில் ஏராளமானவர்கள் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதாக புகார்கள் வந்ததை அடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

“இரண்டு ஆண்டு வலி…” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

“என் வாழ்வில் இரண்டு ஆண்டுகள் நார்சிஸ்டிக் (Narcissistic) கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்தேன்” என...

இரண்டாவது தேனிலவுக்காக தொழிலதிபரின் ஏரிஎம் அட்டை திருடிய யுவதி கைது!

தனது தேனிலவுக்கு செலவிடுவதற்காக ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான ஏடிஎம் அட்டைகளைத் திருடியதாகக்...

மையவாடி பிரச்சினைக்கு மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் மற்றும் பொது அமைப்புகளின் சம்மேளனத்துடன் பிரதேச சபை கலந்துரையாட வேண்டும் – உப தவிசாளர் இஸ்மாயில்

மாளிகைக்காடு மக்களுக்கான நிரந்தரமான மாற்று மையவாடியை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை காரைதீவு பிரதேச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்