இயக்குனர் வசந்த் படம் ரிலீஸ்க்கு தயார்.. ரசிகர்கள் குதூகலம்

Date:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் வசந்த். இவர் இயக்கத்தில் கடைசியாக ‘மூன்று பேர் மூன்று காதல்’ படம் வெளியானது. அதை தொடர்ந்து தற்போது மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள நவரசா அந்தாலஜியில் ‘பாயாசம்’ என்ற பெயரில் இயக்கியுள்ளார்.

தொடர்ந்து வசந்த் இயக்கத்தில் உருவாகி நீண்ட கால கிடப்பில் போடப்பட்டிருக்கும் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் தற்போது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூன்று பேர் மூன்று காதல் படத்திற்கு பிறகு வசந்த் இயக்கத்தில் உருவான படம் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’. பார்வதி, லக்ஷ்மிகுமார் சந்திரமௌலி, கருணாகரன், சுந்தர் ராமு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை வசந்தே தயாரித்துள்ளார். பல்வேறு சர்வதேச விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டுக்களை பெற்ற இந்த படம் நீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு காத்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒருவழியாக தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் இந்தப்படம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே போல் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமி, திரிஷா, ஆத்மிகா, சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகிறது, நீண்ட கால ரிலீசுக்கு காத்திருக்கும் ‘நரகாசூரன்’ படமும் சோனி லைவ்வில் உள்ளது. தொடர்ச்சியான வசந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படம் செப்டம்பர் மாதம் சோனி லைவ்வில் வெளியிடப்பட்டுள்ளது.

9 இயக்குனர்கள், 9 குறும்படங்கள் என உருவாகியுள்ள நவரசா அந்தாலஜி வெப் சீரிஸில் இயக்குனர் வசந்த் ‘பாயசம்’ எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார். ரோகினி, டெல்லி கணேஷ், அதிதி பாலன் உள்ளிட்டோர் இந்த குறும்படத்தில் நடித்துள்ளனர். மணிரத்னம் தயாரித்துள்ள இந்த வெப் தொடர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Share post:

spot_imgspot_img

More like this
Related

புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் வாபஸ்

நேற்று நள்ளிரவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தால் திட்டமிடப்பட்ட...

‘இதற்கு சட்டத்தில் இடமில்லை’: இரண்டு பொலிசாரையும் பிணையில் விடுவித்த நீதிமன்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கும்,...

பாடசாலை வகுப்பறை கட்டடங்களில் அவசர கால வெளியேற்ற பாதை இன்மைக்கு  எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அனர்த்தங்களின் போது மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அவசர கால வெளியேற்றம் இன்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்