உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடு வீதியில் டாக்சி ஓட்டுநரை இளம்பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
அவாத் பகுதியில் போக்குவரத்து சிக்னல் அருகே பாத சாலைகள் பாதையை கடக்கும்போது கார் தன் மீது மோதியதாக கூறி, இளம்பெண் ஒருவர், அந்த காரின் ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளார். மொத்தமாக அந்த பெண் ஓட்டுநரை 22 முறை அறைந்துள்ளார். இதனை அங்கிருந்த பெண் போக்குவரத்து காவலரும் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.
எதற்காக அடிக்கிறீர்கள் என அந்த ஒட்டுநர் கேட்டதற்கு, அவரின் செல்போனை பறித்து உடைத்துஈ மெத்து மெத்தியிருக்கிறார் அந்த இளம்பெண்.
Viral Video: A Girl Continuously Beating a Man (Driver of Car) at Awadh Crossing, Lucknow, UP and allegedly Damaging his Phone inspite of him asking for Reason pic.twitter.com/mMH7BE0wu1
— Megh Updates 🚨™ (@MeghUpdates) July 31, 2021
அந்தப் பெண்ணின் நடத்தைக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்த பெண்ணை கைது செய்ய வேண்டுமெனக்கூறி ட்விட்டரில் #ArrestLucknowGirl என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கி வருகின்றது.




