உரையாடல் சிதைக்கப்பட்டது உறுதியானது: நிசங்க சேனாதிபதியிடம் இழப்பீடு கோரும் தில்ருஷி!

Date:

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளரும், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்கவுக்கும் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் திருத்தப்பட்டது என்பதை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

உரையாடல் வெளியானதை தொடர்ந்து, திருமதி விக்கிரமசிங்க இடைநீக்கம் செய்யப்பட்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

இந்த நிலையில், இடைநீக்க உத்தரவை இரத்து செய்ய வேண்டும் மற்றும் உடனடியாக பணிகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பாய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், நிசங்க சேனாதிபதியிடம் ரூ.2 பில்லியன் ரூபா இழப்பீடு கோரி, தில்ருக்ஷி டயஸ் விக்கிரமரசிங்க சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த சிதைக்கப்பட்ட உரையாடலை நிசங்க சேனாதிபதியே வெளியிட்டிருந்தார்.

அவர் அப்போது அந்த உரையாடலை வெளியிட்டதை தொடர்ந்து அரச சார்பு ஊடகங்கள் அதை மீள மீள ஒலிபரப்பியமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்